47-வது பிறந்த நாளை கொண்டாடும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் என்பது வாழ்வின் சிறப்பான தருணம் என்றும், புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் அவரது பணிகள் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும், பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாநிலத் தலைவராக, கட்சி வளர்ச்சிக்குப் பெரும்பணிகளை மேற்கொண்டதோடு, மத்திய இணையமைச்சர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி வரும் எல்.முருகன், உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுளுடன் தமது பணிகளைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.