ஆன்மீகம் என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல – உலகத்திற்கே முக்கியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இமயமலை செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த்,
ஒவ்வொரு முறையும் ஆன்மீக பயணம் புது அனுபவத்தைத் தருவதாகக் கூறினார்.
ஆன்மீக பயணத்திற்கு பிறகு புது இந்தியா பிறக்குமா என்ற கேள்விக்கு, கடவுளை வேண்டிக்கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.