இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று உக்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.