தஞ்சாவூர் கருட சேவை நிகழ்ச்சியில் 25 கோயில்களில் எழுந்தருளிய பெருமாளை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் 90வது கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்யாண வெங்கடேசப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட 25 கோயில்களில் இருந்து புறப்பட்ட பெருமாள் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.