மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 400 இடங்கள் என்ற இலக்கு நிச்சயம் நிறைவேறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தெற்கிலும், கிழக்கு பிராந்தியத்திலும் கணிசமான வெற்றி கிடைக்கும் என்றார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 24 முதல் 30 இடங்கள் வரை பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும், ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளில் 75 இடங்கள் தங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
அது போல தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 10 இடங்கள் வரை பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால், கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார்.
கிழக்கு மண்டலமான ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுக்கும் என்றும், தென் மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில், பாஜக அதிக இடங்களை பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் 400 இடங்கள் என்ற தங்கள் இலக்கு நிச்சயம் நிறைவேறும் எனவும் அமித்ஷா உறுதியுடன் தெரிவித்தார்.