திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் ரங்கநாதபெருமாள் நம்பெருமாளாக வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 1371-ம் ஆண்டு சுவாமி நம்பெருமாளாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வானது மறுமலர்ச்சி தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு மறுமலர்ச்சி பூஜைக்காக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சித்திரை வீதிகளில் நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது.
அப்போது சிறுவர், சிறுமியர்கள் கோலாட்டம் ஆடியவாறு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.