கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், உதகையில் படகு போட்டியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகை தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதகை படகு இல்லத்தில் படகு போட்டி நடைபெற்றது.
இதில் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியினர் போட்டி என தனித் தனியாக போட்டிகள் நடைபெற்றன.
உதகை படகு இல்ல ஊழியர்களுக்கான துடுப்பு படகு போட்டி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார்.