ராமநாதபுரம் மாவட்டம் கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோயிலில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் சித்திரங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது காளைகள் முதல் இரண்டு பரிசுகளை தட்டிச் சென்றன.
வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசும், தங்க மோதிரமும் வழங்கப்பட்டது.