லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!
Aug 10, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!

Web Desk by Web Desk
Jun 1, 2024, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து வங்கியில் இந்தியா வைத்திருக்கும் தங்கம் இருப்பிலிருந்து 100 டன் தங்கத்தை, ரிசர்வ் வங்கி இந்தியாவுக்குக் திரும்ப கொண்டு வந்துள்ளது. வரும் மாதங்களில் இன்னும் கூடுதல் தங்கத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

தனி மனிதனுக்கு மட்டுமில்லை நாடுகளுக்கும் தங்கமே சிறந்த முதலீடாக கருதப் படுகிறது.
குறிப்பாக ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் போது, அதில் இருந்து தப்பிக்க உதவும் நம்பிக்கையான சேமிப்பு பொருளாக உலக நாடுகள் தங்கத்தைப் பார்க்கின்றன.

மேலும் ஒரு நாட்டின் நிதி ஸ்திரத் தன்மையை அந்நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்தே கணக்கிடப் படுகின்றன. எனவே, தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டும், உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டு தங்கத்தில் முதலீடு செய்கின்றன.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கத் தொடங்கியது. அதுவும் சமீப ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி, அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.

கடந்த ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி 16 டன் தங்கத்தை தனது இருப்பில் சேர்த்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 27 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த மார்ச் மாத நிலவரப் படி, ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 822.1 டன்னாக இருந்தது.

பல நாடுகளும் , பாங்க் ஆப் இங்கிலாந்து என்னும், பிரிட்டன் மத்திய வங்கியில் தங்கள் தங்கத்தை வைத்து பாதுகாத்து வருகின்றன. இந்தியாவும் பிரிட்டன் வங்கியில் 413.8 டன் தங்கதத்தை வைத்திருந்தது.

இந்த நிலையில் தான், 100 டன் தங்கத்தை பிரிட்டன் வங்கியிலிருந்து, இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இந்த 100 டன் தங்கம் என்பது வெளிநாடுகளில் இந்தியா வைத்திருக்கும் தங்க கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிறப்பு விமானம் மூலம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்ட 100 டன் தங்கம், மும்பையின் மின்ட் சாலை மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வாங்கும் தங்கத்தை எங்கே சேமித்து வைக்க வேண்டும் என்பதை அண்மையில் மதிப்பாய்வு செய்த ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் தங்கம் கையிருப்பு அதிகரித்து வருவதால், சில தங்கத்தை இந்தியாவுக்குத் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது என்றும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின், தற்போது 100 டன் தங்கம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தங்கத்தைக் கொண்டு வருவதற்காக ,மத்திய அரசிடமிருந்து, சுங்கத் துறை வரிவிலக்கு பெற்றிருக்கும் ரிசர்வ் வங்கி, வரும் மாதங்களில் மேலும் சில டன் தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரவும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பு கொண்டுள்ள முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Background of 100 tons of gold from London to India!
ShareTweetSendShare
Previous Post

3டி-பிரிண்டிங் ராக்கெட்: இந்தியா புது சாதனை!

Next Post

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Related News

இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடல் – பாகிஸ்தானுக்கு இரு மாதங்களில் 1,240 கோடி இழப்பு!

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீட்டராக உயர்த்துவதே நோக்கம் – நிதின் கட்கரி

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு – பிரேமலதா விஜயகாந்த்

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது மாபெரும் தவறு – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்

போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மறுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் – உபேந்திர திவேதி

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 10 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies