டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?
Jul 29, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Murugesan M by Murugesan M
Jun 2, 2024, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குவதை எளிதாக்கவே, மெக்கானிக்கல் மற்றும் அனலாக் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மயமாக்கல் என்பது வளர்ச்சித் திட்டமா ? வீழ்ச்சி திட்டமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!

“குடி குடியை கெடுக்கும்” “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு” என வாசகங்களை மது பாட்டில்களில் அச்சடித்துவிட்டு, மதுபானங்களை விதவிதமாக தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ELITE டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் மதுபிரியர்கள் பண பரிவர்த்தனைக்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறை படுத்தியுள்ளது. சென்னையில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணத்திற்கு பதிலாக UPI மூலம் பணம் செலுத்தி பில்லையும் பெற்று கொள்ளலாம்.

தமிழ்நாடெங்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் டிஜிட்டல் திட்டத்தை டாஸ்மாக்கிலும் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இதன்மூலம் மது பிரியர்கள் எளிமையாக பணம் செலுத்தி மது பாட்டில்களை பெற்றுக் கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை ஓட்டமாக சென்னை மற்றும் கோவையில் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டலாக மாற்றும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இன்னும் 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு மது பாட்டில்கள் ஆர்டர் கொடுப்பது முதல், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபிரியர்கள் கைககளில் மதுபாட்டில்கள் சேரும் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆகிறதாம். மேலும் மது பாட்டில்கள் செல்லும் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்த இடத்துலேயே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
என்னதான் டிஜிட்டல் மயமானாலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் பணத்தை கடைக்காரர்கள் வாங்காமல் விட மாட்டார்கள் என்கிறார்கள் மதுபிரியர்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதியதாக டிஜிட்டல் டாஸ்மாக் கடைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். முறைகேடுகள் குறையும். எளிதாக கண்காணிக்க முடியும் என்கிறார் டாஸ்மாக் பணியாளர்.

டாஸ்மாக்கில் டிஜிட்டல் மயம் , தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அங்கமாக இருந்தாலும் இளைய சமுதாயத்தினர் மற்றும் தினமும் குடிக்க ஆர்வமில்லாதோரைக் கூட எளிமையில் அடிமையாக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் மதுப்பிரியர்களின் நிலைமையோ கேள்விக்குறிதான்.

Tags: Why are Tasmac stores interested in going digital?
ShareTweetSendShare
Previous Post

லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!

Next Post

மயோனெய்ஸ் (Mayonnaise) எனப்படும் இறுக்கமான சுவையூட்டி க்ரீம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies