டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Murugesan M by Murugesan M
Jun 2, 2024, 07:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குவதை எளிதாக்கவே, மெக்கானிக்கல் மற்றும் அனலாக் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மயமாக்கல் என்பது வளர்ச்சித் திட்டமா ? வீழ்ச்சி திட்டமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!

“குடி குடியை கெடுக்கும்” “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு” என வாசகங்களை மது பாட்டில்களில் அச்சடித்துவிட்டு, மதுபானங்களை விதவிதமாக தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ELITE டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் மதுபிரியர்கள் பண பரிவர்த்தனைக்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறை படுத்தியுள்ளது. சென்னையில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணத்திற்கு பதிலாக UPI மூலம் பணம் செலுத்தி பில்லையும் பெற்று கொள்ளலாம்.

தமிழ்நாடெங்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் டிஜிட்டல் திட்டத்தை டாஸ்மாக்கிலும் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இதன்மூலம் மது பிரியர்கள் எளிமையாக பணம் செலுத்தி மது பாட்டில்களை பெற்றுக் கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை ஓட்டமாக சென்னை மற்றும் கோவையில் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டலாக மாற்றும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இன்னும் 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு மது பாட்டில்கள் ஆர்டர் கொடுப்பது முதல், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபிரியர்கள் கைககளில் மதுபாட்டில்கள் சேரும் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆகிறதாம். மேலும் மது பாட்டில்கள் செல்லும் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்த இடத்துலேயே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
என்னதான் டிஜிட்டல் மயமானாலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் பணத்தை கடைக்காரர்கள் வாங்காமல் விட மாட்டார்கள் என்கிறார்கள் மதுபிரியர்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதியதாக டிஜிட்டல் டாஸ்மாக் கடைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். முறைகேடுகள் குறையும். எளிதாக கண்காணிக்க முடியும் என்கிறார் டாஸ்மாக் பணியாளர்.

டாஸ்மாக்கில் டிஜிட்டல் மயம் , தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அங்கமாக இருந்தாலும் இளைய சமுதாயத்தினர் மற்றும் தினமும் குடிக்க ஆர்வமில்லாதோரைக் கூட எளிமையில் அடிமையாக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் மதுப்பிரியர்களின் நிலைமையோ கேள்விக்குறிதான்.

Tags: Why are Tasmac stores interested in going digital?
Share
Tweet
SendShare
Previous Post

லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!

Next Post

மயோனெய்ஸ் (Mayonnaise) எனப்படும் இறுக்கமான சுவையூட்டி க்ரீம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies