டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?
Jun 14, 2026, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Murugesan M by Murugesan M
Jun 2, 2024, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குவதை எளிதாக்கவே, மெக்கானிக்கல் மற்றும் அனலாக் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மயமாக்கல் என்பது வளர்ச்சித் திட்டமா ? வீழ்ச்சி திட்டமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!

“குடி குடியை கெடுக்கும்” “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு” என வாசகங்களை மது பாட்டில்களில் அச்சடித்துவிட்டு, மதுபானங்களை விதவிதமாக தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ELITE டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் மதுபிரியர்கள் பண பரிவர்த்தனைக்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறை படுத்தியுள்ளது. சென்னையில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணத்திற்கு பதிலாக UPI மூலம் பணம் செலுத்தி பில்லையும் பெற்று கொள்ளலாம்.

தமிழ்நாடெங்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் டிஜிட்டல் திட்டத்தை டாஸ்மாக்கிலும் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இதன்மூலம் மது பிரியர்கள் எளிமையாக பணம் செலுத்தி மது பாட்டில்களை பெற்றுக் கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை ஓட்டமாக சென்னை மற்றும் கோவையில் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டலாக மாற்றும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இன்னும் 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு மது பாட்டில்கள் ஆர்டர் கொடுப்பது முதல், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபிரியர்கள் கைககளில் மதுபாட்டில்கள் சேரும் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆகிறதாம். மேலும் மது பாட்டில்கள் செல்லும் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்த இடத்துலேயே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
என்னதான் டிஜிட்டல் மயமானாலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் பணத்தை கடைக்காரர்கள் வாங்காமல் விட மாட்டார்கள் என்கிறார்கள் மதுபிரியர்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதியதாக டிஜிட்டல் டாஸ்மாக் கடைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். முறைகேடுகள் குறையும். எளிதாக கண்காணிக்க முடியும் என்கிறார் டாஸ்மாக் பணியாளர்.

டாஸ்மாக்கில் டிஜிட்டல் மயம் , தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அங்கமாக இருந்தாலும் இளைய சமுதாயத்தினர் மற்றும் தினமும் குடிக்க ஆர்வமில்லாதோரைக் கூட எளிமையில் அடிமையாக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் மதுப்பிரியர்களின் நிலைமையோ கேள்விக்குறிதான்.

Tags: Why are Tasmac stores interested in going digital?
ShareTweetSendShare
Previous Post

லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!

Next Post

மயோனெய்ஸ் (Mayonnaise) எனப்படும் இறுக்கமான சுவையூட்டி க்ரீம்!

Related News

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies