லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!
Jul 24, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!

Murugesan M by Murugesan M
Jun 1, 2024, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து வங்கியில் இந்தியா வைத்திருக்கும் தங்கம் இருப்பிலிருந்து 100 டன் தங்கத்தை, ரிசர்வ் வங்கி இந்தியாவுக்குக் திரும்ப கொண்டு வந்துள்ளது. வரும் மாதங்களில் இன்னும் கூடுதல் தங்கத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

தனி மனிதனுக்கு மட்டுமில்லை நாடுகளுக்கும் தங்கமே சிறந்த முதலீடாக கருதப் படுகிறது.
குறிப்பாக ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் போது, அதில் இருந்து தப்பிக்க உதவும் நம்பிக்கையான சேமிப்பு பொருளாக உலக நாடுகள் தங்கத்தைப் பார்க்கின்றன.

மேலும் ஒரு நாட்டின் நிதி ஸ்திரத் தன்மையை அந்நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்தே கணக்கிடப் படுகின்றன. எனவே, தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டும், உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டு தங்கத்தில் முதலீடு செய்கின்றன.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கத் தொடங்கியது. அதுவும் சமீப ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி, அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.

கடந்த ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி 16 டன் தங்கத்தை தனது இருப்பில் சேர்த்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 27 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த மார்ச் மாத நிலவரப் படி, ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 822.1 டன்னாக இருந்தது.

பல நாடுகளும் , பாங்க் ஆப் இங்கிலாந்து என்னும், பிரிட்டன் மத்திய வங்கியில் தங்கள் தங்கத்தை வைத்து பாதுகாத்து வருகின்றன. இந்தியாவும் பிரிட்டன் வங்கியில் 413.8 டன் தங்கதத்தை வைத்திருந்தது.

இந்த நிலையில் தான், 100 டன் தங்கத்தை பிரிட்டன் வங்கியிலிருந்து, இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இந்த 100 டன் தங்கம் என்பது வெளிநாடுகளில் இந்தியா வைத்திருக்கும் தங்க கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிறப்பு விமானம் மூலம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்ட 100 டன் தங்கம், மும்பையின் மின்ட் சாலை மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வாங்கும் தங்கத்தை எங்கே சேமித்து வைக்க வேண்டும் என்பதை அண்மையில் மதிப்பாய்வு செய்த ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் தங்கம் கையிருப்பு அதிகரித்து வருவதால், சில தங்கத்தை இந்தியாவுக்குத் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது என்றும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின், தற்போது 100 டன் தங்கம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தங்கத்தைக் கொண்டு வருவதற்காக ,மத்திய அரசிடமிருந்து, சுங்கத் துறை வரிவிலக்கு பெற்றிருக்கும் ரிசர்வ் வங்கி, வரும் மாதங்களில் மேலும் சில டன் தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரவும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பு கொண்டுள்ள முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Background of 100 tons of gold from London to India!
ShareTweetSendShare
Previous Post

3டி-பிரிண்டிங் ராக்கெட்: இந்தியா புது சாதனை!

Next Post

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Related News

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies