பாஜகவிற்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், பாரதிய ஜனதா கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் ஒரு பெரிய ஆதரவை கொடுத்துக் கொண்டிருப்பதை இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்த உள்ளதாகவும்அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.