மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றுமென தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தர ராஜன், தனது பிறந்தநாளை ஒட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தமது தந்தை குமரி அனந்தனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நாட்டிற்கு நல்ல திட்டங்களை அளித்ததற்காக, மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார். திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளதற்கு வேங்கை வயல் பிரச்னையே உதாரணம் என்றும் கூறினார்.