டெல்லியிலிருந்து மும்பை நோக்கி சென்ற ஆகாஷா ஏர் விமானம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் ஒரு குழந்தை, ஆறு பணியாளர்கள் என மொத்தம் 186 பேர் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது திடீரென பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், விமானத்தை உடனடியாக அகமதாபாத் சர்தார் வல்லப பாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் விமானி தரையிறக்கினார்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டதாக ஆகாஷா ஏர் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.