நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை கொட்டும் மழையில் ஊழியர்கள் வெளியே விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் சக்திவேல் என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை கவனித்து கொள்ள ஆள் இல்லாததால், மருத்துவமனை ஊழியர்கள் அவரை கொட்டும் மழையில் வெளியே விட்டு சென்றுள்ளனர்.
இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனை கவனித்த ஊழியர்கள் மீண்டும் அவரை சக்கர நாற்காலியில் அமரவைத்து சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.