நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளது தெரியவந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலம் சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர்,
இந்த வெற்றி இந்திய ஜனநாயத்தித்திற்கு கிடைத்த வெற்றி என்றும், 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
தன்னுடைய தாய் இல்லாமல் சந்தித்த முதல் தேர்தல் என்றும், ஆனாலும் நாட்டில் ஏராளமான தாய்மார்களின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணி 1962ஆம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக ஆட்சி அமைப்பதாக குறிப்பிட்ட அவர், டெல்லி, இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு முழு ஆதரவை மக்கள் வழங்கியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தெலங்கானாவில் ஆளும் காங்கிரசுக்கு சமமான இடங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.