தேனி மாவட்டம், போடிமெட்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர், தனது நண்பர்கள் இருவருடன் கொச்சின் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது போடிமெட்டின் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் நின்றுள்ளது.
பின்னர் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தபோது, திடீரென இன்ஜினில் புகை கிளம்பி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து காரிலிருந்து மூவரும் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்து சேதமடைந்தது.