ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மலர் சந்தையில் முகூர்த்த நாட்களையொட்டி மல்லிகைப் பூ விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் முகூர்த்த நாட்களையொட்டி, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூவின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு சுமார் 600 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.