மீஞ்சூர் அருகே ஸ்ரீராமானுஜரின் அவதார தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரமுடி அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு பகுதியில் ஶ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஶ்ரீநாராயண நந்தவனத்தில், ஆயிரத்து 7 -ஆம் ஆண்டு ஸ்ரீராமானுஜரின் திருஅவதார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அப்போது, ஸ்ரீராமானுஜருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீட முடி சாத்தப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
மேலும், 108 வைணவ திவ்ய தேசங்களில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துவரப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.