தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காவல்துறையில் நிருபராக பணிபுரிந்து வந்தவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
குருக்கள்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை என்பவர், கோவை மாவட்ட காவல்துறையில் நிருபராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த பெரியதுரை, கள்ளத்திகுளம் காட்டுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.