பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார்.
அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் யார் யாருக்கு எந்தந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும் புதிய அமைச்சர்கள் தங்களது சொத்துப்பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.