கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே விசாரணைக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளரை மண்வெட்டியால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கருங்காலிவிளையை சேர்ந்த மாற்றுத்திறனாளி புஷ்பலதாவை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த மகேந்திர கொடிலன் என்பவர் தாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் வில்சன் விசாரணைக்கு சென்றபோது, மகேந்திர கொடிலன் மண்வெட்டியால் தாக்கியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து மகேந்திர கொடிலனை போலீசார் கைது செய்தனர். காயம் காரணமாக இருவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.