சிக்கிமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் உயிரிழந்தார். சிக்கிம் மாநிலம் மாங்கன் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் கனமழைக்கு ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.