குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
குவைத்தில் இயங்கி வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டு வர, இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130 விமானம் குவைத் புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானம், பலியான இந்தியர்களின் உடல்களை எடுத்துக் கொண்டு கொச்சி வந்தடைந்தது. இதனையடுத்து உயிரிழந்த 7 தமிழர்களின் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி சென்றார்.