ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தமிழக அரசால் தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமத்துவபுரம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் 100 வீடுகள் மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டது.
அவை சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு தற்போது புதிய வீடுகள் கட்டும் பணி வெகு நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும், காலதாமதமாக பணிகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.