ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட மேலாளர் வீட்டில் கணக்கில்வராத 3 லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலையடுத்து பரமக்குடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
அப்போது கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு என்பவரின் அறையில், கணக்கில்வராத 3 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.