காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கோவிந்தவாடி அகரம் காலனி பகுதியை சேர்ந்த பார்வேந்தன், அவரது சகோதரர் உதயநிதி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், பகவதி ஆகியோருக்கும், பார்வேந்தனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் பார்வேந்தனின் வீட்டுக்குள் புகுந்த மணிகண்டன், பகவதி ஆகியோர், உதயநிதியை வெட்டிப் படுகொலை செய்தனர்.
மேலும் உதயநிதியின் நண்பரான கிரியையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.