அதிமுகவை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம் என எடப்பாடியை பழனிசாமியை மறைமுகமாக குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சி ஒன்றுபட்டால் தங்களது பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல், அனைவரும் ஒன்று கூடி பெருந்தன்மையான முடிவினை எடுக்க வேண்டும் வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்கி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டுமென கட்சித் தொண்டர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.