திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 2 அரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் 1 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மிக்சி ஜாரில் மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.