விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா பொருட்கள் பயன்படுத்திய 693 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகரில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தினேஷ் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.