தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்றார்.
அப்போது தமிழகத்தில் பாஜகவை மேலும் வளர்ச்சியடையச் செய்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராக திறம்படச் செயல்பட்டவருமான தமிழிசை சௌந்தரராஜனை இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசை சௌந்தரராஜனின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.