VIP பாதுகாப்பு.. புதிய நடைமுறை...
Nov 15, 2025, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

VIP பாதுகாப்பு.. புதிய நடைமுறை…

Web Desk by Web Desk
Jun 15, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முக்கிய பிரமுகர்களான, விஐபி-களுக்கு வழங்கப் படும் கருப்பு பூனை படை பாதுகாப்பு
திரும்பப் பெறப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முக்கிய இடங்களில் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…!

தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் விமான கடத்தல்கள் போன்ற சூழல்களை கையாளுவதற்காக, கடந்த 1984-ம் ஆண்டு என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இதில் உள்ள கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், காலப்போக்கில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினால், கருப்பு பூனை படையினரால் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட முடியும் ? என்ற கேள்வி எழுந்தது. மேலும், விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது கருப்பு பூனை படையினருக்கு கூடுதல் சுமை என்றும் கருதப்பட்டது.

எனவே விஜபி-களுக்கு வழங்கப்படும் கருப்பு பூனை படை கமாண்டோக்களை திரும்ப பெறும் திட்டத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே மத்திய அரசு பரிசீலித்து வந்தது. இதன் தொடக்கமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் வதேரா காந்தி என காங்கிரஸ் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த SPG பாதுகாப்பு நீக்கப்பட்டது.

இந்நிலையில், விஐபிக்களுக்கான பாதுகாப்பு பணிகளில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவருவது?, விஐபிகளுக்கான பாதுகாப்பைத் திரும்ப பெறுவதா ? அல்லது குறைப்பதா ? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கருப்பு பூனை படை கமாண்டோக்களை விஐபி பாதுகாப்புப் பணிகளில் இருந்து முற்றிலுமாகத் திரும்பப் பெறுவதோடு, Z + பாதுகாப்பு படை வீரர்கள் மீண்டும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு திரும்புவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியில், இனி துணை இராணுவப் படையினர் ஈடுபடுத்தப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறி வரும், பதான்கோட் மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில், விரைவில் NSG எனப்படும் தேசிய பாதுகாப்பு படை மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், இராமர் கோயில் இருக்கும் அயோத்தியிலும் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: VIP Security.. New Procedure...
ShareTweetSendShare
Previous Post

குவைத் தீ விபத்தில் கருகிய உயிர்கள்!

Next Post

திமுகவின் வெற்றி நிரந்தரம் அல்ல – அண்ணாமலை!

Related News

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies