VIP பாதுகாப்பு.. புதிய நடைமுறை...
Aug 7, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

VIP பாதுகாப்பு.. புதிய நடைமுறை…

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முக்கிய பிரமுகர்களான, விஐபி-களுக்கு வழங்கப் படும் கருப்பு பூனை படை பாதுகாப்பு
திரும்பப் பெறப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முக்கிய இடங்களில் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…!

தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் விமான கடத்தல்கள் போன்ற சூழல்களை கையாளுவதற்காக, கடந்த 1984-ம் ஆண்டு என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இதில் உள்ள கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், காலப்போக்கில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினால், கருப்பு பூனை படையினரால் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட முடியும் ? என்ற கேள்வி எழுந்தது. மேலும், விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது கருப்பு பூனை படையினருக்கு கூடுதல் சுமை என்றும் கருதப்பட்டது.

எனவே விஜபி-களுக்கு வழங்கப்படும் கருப்பு பூனை படை கமாண்டோக்களை திரும்ப பெறும் திட்டத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே மத்திய அரசு பரிசீலித்து வந்தது. இதன் தொடக்கமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் வதேரா காந்தி என காங்கிரஸ் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த SPG பாதுகாப்பு நீக்கப்பட்டது.

இந்நிலையில், விஐபிக்களுக்கான பாதுகாப்பு பணிகளில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவருவது?, விஐபிகளுக்கான பாதுகாப்பைத் திரும்ப பெறுவதா ? அல்லது குறைப்பதா ? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கருப்பு பூனை படை கமாண்டோக்களை விஐபி பாதுகாப்புப் பணிகளில் இருந்து முற்றிலுமாகத் திரும்பப் பெறுவதோடு, Z + பாதுகாப்பு படை வீரர்கள் மீண்டும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு திரும்புவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியில், இனி துணை இராணுவப் படையினர் ஈடுபடுத்தப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறி வரும், பதான்கோட் மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில், விரைவில் NSG எனப்படும் தேசிய பாதுகாப்பு படை மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், இராமர் கோயில் இருக்கும் அயோத்தியிலும் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: VIP Security.. New Procedure...
Share
Tweet
SendShare
Previous Post

குவைத் தீ விபத்தில் கருகிய உயிர்கள்!

Next Post

திமுகவின் வெற்றி நிரந்தரம் அல்ல – அண்ணாமலை!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies