திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் மேள தாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்ட புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.