தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள சில்லடி தர்கா கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் முன்னேற்ற கழக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைபெற்ற இந்த தொழுகையில் நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலிருந்து இஸ்லாமியர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள தர்கா திடலில் ஹஜ் பெருநாளை கொண்டாடினர். 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி இறைவனை வேண்டி துவா பாடினர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையொட்டி ராணிப்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்தபடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இறை தூதரான இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் விதமாக துவா பாடப்பட்டு அமைதியான முறையில் வழிபாடு நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.