கேரளாவில் பாஜக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணூரில் உள்ள பாஜக பிரமுகர் சனூப் வீட்டில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருண் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசினார்.
இதேபோல சனூப்பின் உறவினர் வீட்டிலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனையடுத்து அருணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.