மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரி அருகே ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில், ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்கு கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
சிக்னல் கோளாறு காரணமாக, இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் ஃபன்சிடேவா பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் பின்னால் வந்த சரக்கு ரயில் ஒன்று, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்த நிலையில், ஒன்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அங்கு ரயில் சேவை தொடங்கியுள்ளது.