நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் இருந்து சுமார் 241 விசைப்படகுகளுடன் ஆழ்கடலுக்கு மீனவர்கள் சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பார்த்திபன், முரளி, சாரதி, ராமதாஸ் ஆகியோரை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.