வெறி கொண்டு மூட்டிய எருமை மாடு அலறி ஓடிய மக்கள்!
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெறி கொண்டு மூட்டிய எருமை மாடு அலறி ஓடிய மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் வெறிகொண்டு முட்டிய எருமை மாட்டால் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்தனர். தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி, கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தனது உறவினர் இல்லத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கிராம வீதியின் ஒரு முனையில் இருந்து ஒடி வந்த எருமை மாடு, அவ்வழியில் நடந்து சென்ற மதுமதியை கொடூரமாக முட்டி, தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.

மதுமதியின் ஆடை எருமை மாட்டின் கொம்பில் மாட்டிக் கொண்டதால், 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். 40 தையல்களுடன் மதுமதி சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுமதியை காப்பாற்ற முயன்ற அதே பகுதியை சேர்ந்த இஸ்திரி கடைக்காரர் சந்திரசேகரையும் எருமை மாடு புரட்டி போட்டதில், அவர் காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் எருமை மாட்டை மின் கம்பத்தில் கயிறு மூலமாக கட்டி வைத்துள்ளனர். இருப்பினும் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் மிரண்டு ஓடிய எருமை மாடு, முனுசாமி என்பவரையும் தாக்கியுள்ளது.

கிராம வீதி வழியாக உரிமையாளருடன் வந்துகொண்டிருந்த மாட்டை நாய் கடித்ததாகவும், அந்த பயத்தில் மிரண்ட மாடு ஆக்ரோஷமாக ஓடி வந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட மாட்டின் உரிமையாளர் ஒடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாடுகள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதற்கான காரணம் என்ன என்பதை விளக்குகிறார் விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்பின் இணை நிறுவனர் மருத்துவர் சின்னி கிருஷ்ணன்.

திருவொற்றியூர் கிராம வீதியில் இருந்து மீட்கப்பட்ட எருமை மாட்டை பெரம்பூரில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்திற்கு மாநகராட்சி கொண்டு சென்றுள்ளது. ஒருபக்கம் தெரு நாய்கள் தொல்லை, மற்றொரு பக்கம் மாடுகள் என பொதுவெளியில் நடமாடும் மக்களை தினமும் அச்சுறுத்தும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: The buffalo ran away screaming with rage!
ShareTweetSendShare
Previous Post

திமுக கொண்டாட்டம், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

பில்கேட்ஸ் புது பிசினஸ் குறைந்த செலவில் அணுமின் நிலையம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies