வெறி கொண்டு மூட்டிய எருமை மாடு அலறி ஓடிய மக்கள்!
Sep 20, 2026, 03:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெறி கொண்டு மூட்டிய எருமை மாடு அலறி ஓடிய மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் வெறிகொண்டு முட்டிய எருமை மாட்டால் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்தனர். தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி, கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தனது உறவினர் இல்லத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கிராம வீதியின் ஒரு முனையில் இருந்து ஒடி வந்த எருமை மாடு, அவ்வழியில் நடந்து சென்ற மதுமதியை கொடூரமாக முட்டி, தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.

மதுமதியின் ஆடை எருமை மாட்டின் கொம்பில் மாட்டிக் கொண்டதால், 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். 40 தையல்களுடன் மதுமதி சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுமதியை காப்பாற்ற முயன்ற அதே பகுதியை சேர்ந்த இஸ்திரி கடைக்காரர் சந்திரசேகரையும் எருமை மாடு புரட்டி போட்டதில், அவர் காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் எருமை மாட்டை மின் கம்பத்தில் கயிறு மூலமாக கட்டி வைத்துள்ளனர். இருப்பினும் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் மிரண்டு ஓடிய எருமை மாடு, முனுசாமி என்பவரையும் தாக்கியுள்ளது.

கிராம வீதி வழியாக உரிமையாளருடன் வந்துகொண்டிருந்த மாட்டை நாய் கடித்ததாகவும், அந்த பயத்தில் மிரண்ட மாடு ஆக்ரோஷமாக ஓடி வந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட மாட்டின் உரிமையாளர் ஒடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாடுகள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதற்கான காரணம் என்ன என்பதை விளக்குகிறார் விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்பின் இணை நிறுவனர் மருத்துவர் சின்னி கிருஷ்ணன்.

திருவொற்றியூர் கிராம வீதியில் இருந்து மீட்கப்பட்ட எருமை மாட்டை பெரம்பூரில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்திற்கு மாநகராட்சி கொண்டு சென்றுள்ளது. ஒருபக்கம் தெரு நாய்கள் தொல்லை, மற்றொரு பக்கம் மாடுகள் என பொதுவெளியில் நடமாடும் மக்களை தினமும் அச்சுறுத்தும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: The buffalo ran away screaming with rage!
Share
Tweet
SendShare
Previous Post

திமுக கொண்டாட்டம், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

பில்கேட்ஸ் புது பிசினஸ் குறைந்த செலவில் அணுமின் நிலையம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies