அழிவின் விளிம்பில் பிளம்ஸ், பேரிக்காய் கண்ணீரில் விவசாயிகள்!
Aug 8, 2025, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அழிவின் விளிம்பில் பிளம்ஸ், பேரிக்காய் கண்ணீரில் விவசாயிகள்!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ்,பேரிக்காய் மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் நிலைமைக்கு யார் காரணம்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமாகும். இங்கு, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ்.

பிரையண்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, குணா கேவ்ஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பிரசித்திப்பெற்றதாகும். இதனை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொடைக்கானல் இயற்கையை ரசிக்க மட்டுமல்ல, இங்கு விளையும் பிளம்ஸ், பேரிக்காய், ஆப்பிள் பழ வகைகளும், கேரட், காலிஃபளவர் உள்ளிட்ட காய்கறிகளுக்கு நல்ல மார்கெட் உள்ளது. குறிப்பாக சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் மரங்களை வளர்த்து, பெரும்பாலான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும், கேரளா, பெங்களூர், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் இந்த பழங்களை விற்பனைக்கு நல்ல லாபம் ஈட்டி வந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேரிக்காய், பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், காலம் தவறி பெய்து வரும் மழை மற்றும் இரசாயன உரங்களே காரணம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். தற்போது ஒரு கிலோ பேரிக்காய் 100 ரூபாய்க்கும், பிளம்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கும் நிலையில், விளைச்சல் இல்லாததால், கடைகளுக்கு ஒரு சில கிலோ மட்டுமே வருவதாகவும், இதுதொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பதில்லை, எந்த ஒரு ஆலோசனையும் வழங்குவதில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதுடன், புதிய நாற்றுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று தோட்டக்லை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், சமீப காலமாக விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவதால், பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கனத்த குரலுடன் கவலை தெரிவிக்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் பிளம்ஸ், பேரிக்காய் பழங்களை காட்சி பொருளாக மட்டுமே காணமுடியும். எனவே, மாவட்ட நிர்வாகமும், தோட்டகலை துறை செயலரும் மலைப்பயிர்களை காப்பாற்ற துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Plums on the brink of destructionpear farmers in tears!
ShareTweetSendShare
Previous Post

பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொன்ற மகன்!

Next Post

ஹரியானாவில் ட்ரோனில் மளிகை பொருள் விநியோகம்!

Related News

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies