உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாலந்தா பல்கலைக்கழகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
நாளந்தா என்பது இந்தியாவின் கடந்த காலத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்ல என்று தெரிவித்த பிரதமர், உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியம் இதனுடன் இணைந்துள்ளாக கூறினார்.
நாளந்தாவின் மறுமலர்ச்சி இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒரு காலத்தில் இந்தியாவின் கல்வி அடையாள மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்ததாகவும், பண்டைய காலங்களில், நாளந்தா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசியத்தின் அடிப்படையில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
நாள்ந்தா பல்கலைகழகத்திற்கு பல்வேறு தரப்பினரும் கல்வி கற்க வந்ததாகவும் அவர் கூறினார். உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.