ஆந்திர பிரதேச துணை முதல்வராக பவன் கல்யாண் இன்று முறைப்படி பொறுபேற்றுக்கொண்டார்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 135 தொகுதிகளை கைப்பற்றியது.
ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன, இதனையடுத்து ஆந்திர முதல்வராக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள தலைமைசெயலகத்தில் துணை முதல்வராக பவன் கல்யாண் இன்று பொற்பேற்றுக்கொண்டார்.
முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். துணை முதல்வராக பதவியேற்ற பவன் கல்யாணுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.