குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Oct 29, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பது உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர்நீதிமன்றம் விமர்சித்த பின்பும் அதனை அரசு பின்பற்ற நினைப்பது சமூக நீதிக்கு எதிரான நடைமுறை எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆள்குத்தகை முறையை தமிழக அரசு திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நியமனங்களில் ஓய்வூதியம், பணிக்கொடை மட்டுமல்லாது எந்த வகையான இட ஒதுக்கீடும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படாது. இது மிகப்பெரிய அநீதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை ஒற்றை ஆணியில் பறித்திருக்கும் திமுகவுக்கு சமூகநீதி குறித்தும், தொழிலாளர்கள் உரிமை குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

மேலும், சமூகநீதிக்கும், தொழிலாளர் உரிமைக்கும் எதிரான குத்தகை முறை நியமனத்தை அரசு கைவிடவில்லை என்றால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள அவர், குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை அரசு கைவிட வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Appointment of driver and conductor on lease - Anbumani Ramadoss condemned!
ShareTweetSendShare
Previous Post

உற்றுநோக்கப்படும் சபாநாயகர் தேர்வு புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு?

Next Post

சிலம்பம் சுற்றி குளங்களை தூர்வாரக் கோரி மனு!

Related News

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies