குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Jul 5, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பது உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர்நீதிமன்றம் விமர்சித்த பின்பும் அதனை அரசு பின்பற்ற நினைப்பது சமூக நீதிக்கு எதிரான நடைமுறை எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆள்குத்தகை முறையை தமிழக அரசு திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நியமனங்களில் ஓய்வூதியம், பணிக்கொடை மட்டுமல்லாது எந்த வகையான இட ஒதுக்கீடும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படாது. இது மிகப்பெரிய அநீதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை ஒற்றை ஆணியில் பறித்திருக்கும் திமுகவுக்கு சமூகநீதி குறித்தும், தொழிலாளர்கள் உரிமை குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

மேலும், சமூகநீதிக்கும், தொழிலாளர் உரிமைக்கும் எதிரான குத்தகை முறை நியமனத்தை அரசு கைவிடவில்லை என்றால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள அவர், குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை அரசு கைவிட வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Appointment of driver and conductor on lease - Anbumani Ramadoss condemned!
ShareTweetSendShare
Previous Post

உற்றுநோக்கப்படும் சபாநாயகர் தேர்வு புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு?

Next Post

சிலம்பம் சுற்றி குளங்களை தூர்வாரக் கோரி மனு!

Related News

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies