நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஆகஸ்ட் 13ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்கள் மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவியை பறிக்கும் 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு INDI கூட்டணியில் இருந்து திமுக சற்று விலகியுள்ள நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் அக்கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
















