இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சனந்த் மாவட்டத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த தலைமுறை தொழில்நுட்ப புரட்சியை இந்திய இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரு காலத்தில் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனம் இந்தியா வந்தாலே கொண்டாடும் நிலை இருந்ததாகவும் ஆனால் தற்போது போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியா வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
சானந்த் ஆலை ஆண்டுக்கு 20 கோடி சிப்புகளை உற்பத்தி செய்யும் வகையில் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். ஆண்டுக்கு 500 கோடி சிப்புகள் வரை உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான ஒரு லட்சிய எதிர்கால இலக்கை நிர்ணயித்துள்ளதற்காக ‘சிஜி செமி’ (CG Semi) நிறுவனத்தை அவர் பாராட்டினார். அந்த இலக்கை விரைவில் அடைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
















