ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரும் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேசிய பயணத்தை முடித்துவிட்டு 8 முதல் 10ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
அந்த வகையில் 9ம் தேதி மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் முகநூல் தளத்தில் அபு முஸ்தபா என்பவர் ஒரு பதிவை வெளியிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை, மிரட்டல் பதிவை வெளியிட்ட நபரின் ஐபி முகவரியை கண்டறிந்துள்ளது. இதனிடையே பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன….
















