இந்தியாவில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மட்கும் வகையிலான பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மட்கும் பாலிமர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பொருளாதார மாற்றம் 2026′ என்ற தலைப்பில், சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் (CIPET) வளாகத்தில் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.
சர்க்கரை, ஸ்டார்ச் உள்ளிட்ட பொருட்களில் இருந்து பாலி லாக்டிக் ஆசிட் மூலம் மட்கும் வகையிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டிலேயே மிகப்பெரிய மட்கும் பிளாஸ்டிக் ஆலை உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு முதல் செயல்பட இருப்பதாகவும், இத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்வதாகவும் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
















