தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஹோட்டல் தொழிலாளியின் மகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த மெர்லின், 12-ஆம் வகுப்பில் 593 மதிப்பெண்களும், தொழிற்கல்வி கட்-ஆப்பில் 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலிலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஊக்கமே காரணம் என தெரிவித்துள்ள மெர்லின், எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் வேளாண் துறையில் மக்களுக்கு சேவை செய்வதே தனது இலக்கு என்றும் கூறியுள்ளார்.
















